search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பிரசார பாடல்"

    மேற்குவங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடைவிதித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.

    ‘இனி திரிணாமுல் இருக்காது’ என தொடங்கும் அந்த பாடலை அமீத் சக்ரவர்த்தியை எழுத, பா.ஜ.க. எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இசையமைத்து பாடி உள்ளார்.



    பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் இனி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பாபுல் சுப்ரியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாடலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்ததாக பாபுல் சுப்ரியோ மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission 
    ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது. #AbHogaNyay #Congresslaunches #campaignslogan #Nyay #LSpolls
    புதுடெல்லி:

    ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழுகட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. 

    பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மாநில முதல் மந்திரிகள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜக.வின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி  ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடலை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்டுள்ளது.



    பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவெத் அக்தர் இயற்றியுள்ள இந்தப் பாடலுக்கு நிக்கில் அத்வானி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலின் சில வரிகளில் தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக சமூக ஒற்றுமையை சீர்குலைத்து, மதரீதியிலான வெறுப்புணர்வை தூண்டி விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனில் பாஜக ஆட்சேபம் தெரிவித்திருந்தது. பின்னர், தேர்தல் கமிஷனின் தலையீட்டின்படி ஆட்சேபத்துக்குரிய அந்த வரிகள் நீக்கப்பட்டு, இந்த பிரசாரப் பாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் இந்த பிரசாரப் பாடலை நாடு முழுவதும் பிரபலப்படுத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. #AbHogaNyay #Congresslaunches #campaignslogan #Nyay #LSpolls
    ×